அனைத்துக்கட்சி கூட்டம்: குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு

 

தொகுதி மறு சீரமைப்பு காரணமாக  தமிழகத்தில் குறையும் பாராளுமன்ற தொகுதிகள் குறித்து விவாவதிப்பதற்காக மார்ச் 5 தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கான அழைப்பை வெளியிட்டு உள்ளார்.

இதன்படி தமிழகத்தில் உள்ள பதிவு பெற்ற 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, தவெக உட்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 

இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பான மக்கள் பணியாற்றும் கலப்பை மக்கல் இயக்கத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.  

தவெக தலைவர் விஜய்-யிடம் மக்கள் தொடர்பு அலுவராக பணிபுரிந்து பிரசித்தி பெற்ற புலி படத்தை தயார் செய்த பி.டி.செல்வகுமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பணி ஆற்றி வருகிறார். கல்வி கூடங்களுக்கும், கோவில்கள், சர்ச்சுகள், மசுதிகளுக்கும் கட்டிடங்களை கட்டுரை தரும் பி.டி.செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கம் தமிழக அரசால் அங்கீகரிகப்பட்டு அழைக்கப்பட்டிருப்பது அந்த அமைப்பினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post